வெள்ளி, 2 நவம்பர், 2012

      அண்ணாவுக்கு அறிஞர் பட்டம் கொடுத்தவர் யார் தெரியுமா  


          கல்கி.ரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தலைமையில் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது அதில் அண்ணாவும் இன்னும் வேறு பலரும் உரையாற்ற அழைக்கப் பட்டிருந்தனர். குறிப்பிட்ட நேரம் கடந்தும் அண்ணாவைத் தவிற பிற பேச்சாளர்கள் கூட்டத்துக்கு வரவில்லை.  இதனால் அங்கு குழுமியிருந்த பொது மக்களுக்கு பெரும் மனக்குறை ஏற்ப்பட்டது. அதனை  அறிந்த அண்ணா அவர்கள் , சலிப்பை அகற்ற ஒரு உத்தியைக் கையாண்டார் அந்தக் கூட்டத்தில் பிறர் பேசவேண்டிய தலைப்புக்களையும் , தாம் பேசவந்த தலைப்பினையும் எடுத்துக் கொண்டு , முன் குறிப்பு எதுவுமின்றி , தட்டுத் தடங்கல் எதுவும் இல்லாமல் அண்ணா ஒவ்வொரு தலைப்புக்களையும் மிக அழகாக பேசி முடித்தார். பல்வேறு தலைப்புக்களையும் வைத்து  , முன் தயாரிப்பில்லாமல் உரையாற்றிய அண்ணாவின் ஆற்றலைக் கண்டு கல்கி அவர்கள் வியப்பில் ஆழ்ந்தார், உளமாறப் பாராட்டினார். அத்துடன் பொதுமக்கள் முன்னிலையில் அண்ணா அவர்களுக்கு ‘அறிஞர்’ என்னும் பட்டத்தையும் சூட்டி மகிழ்ந்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக